THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Monday, January 07, 2008

திருப்பள்ளியெழுச்சி # 3


கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறி கழற் றாளினை காட்டாய்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: மஹா தேவா! மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான் அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே!

அழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.

எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக.

8 Comments:

  • At 12:28 AM , Blogger வடுவூர் குமார் said...

    இந்த பாடல் வரிகள் ஒரு சினிமா பாடலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

     
  • At 6:50 PM , Blogger Kailashi said...

    தகவலுக்கு நன்றி

     
  • At 11:42 PM , Blogger pattamuthu said...

    Visit

    http://pattamuthu.blogspot.com

    http://shivasevagan.blogspot.com

     
  • At 3:21 AM , Blogger Kailashi said...

    பட்டமுத்து ஐயா நன்றி. தங்கள் இடுகைகள் கண்டேன் அற்புதம். ஓம் நமசிவாய

     
  • At 11:04 PM , Blogger slakshminarayanan said...

    very excellent all your doing
    please be in touch with me on my mble no 988 412 6417
    sivaayanama

     
  • At 7:02 AM , Blogger Kailashi said...

    Thank you Lakshmi Narayanan, I will contact you.

     
  • At 4:10 PM , Blogger madusudanan said...

    10 PADALGAL THAN ULLATHU. MEETHAP PADALGAL ENGE

     
  • At 9:07 AM , Blogger Kailashi said...

    //10 PADALGAL THAN ULLATHU. MEETHAP PADALGAL ENGE//

    Thirupalliyezhuchi padalgal are 10 only. There are 20 padalgal in Thiruvempavai.

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home